குலத்தினைக் காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும், மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத்தரும். குலதெய்வம். பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால், சிறு தெய்வம் என்று அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில், அதன் சக்தியை அளவிட முடியாது.
எமன்கூட ஒருவரின் குலதெய்வத்தின் அறிவுரை பெற்றுத்தான் உயிரை எடுக்க முடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை. எனவேதான், அந்த தெய்வங்கள் “குல தெய்வங்கள்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன, குலதெய்வங்கள் கர்ம வினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழக் கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பெயருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?! ஆனால் குல தெய்வங்களை அறிவதன்மூலம் நம் முன்னோர்கள் அதாவது: நம் தந்த வழி பாட்டன், பாட்டிமார்கள் ஆகியோரை அறியலாம். ஏனெனில், அவர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குல தெய்வமாகும். ஆக, அவர்களுக்கும் முன்னோர்கள் இந்த குலதெய்வங்கள். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழிவழிப்பாதை...
இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த செய்தியாகும். இதன்படி பார்த்தால், குல தெய்வ சன்னதியில் சென்று நாம் நிற்கும்போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இது, ஒரு நீண்ட பெரிய வரிசை. அந்த வரிசையில் நமக்கும் முன், பலர் பல காலகட்டங்களில் நின்று வணங்கியிருக்கின்றனர் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணிங்களைக் கட்டி சேர்த்திருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கலாம். இருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று... அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியைத் தொழும்போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக, இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்து...
விஞ்ஞான முறையில் யோசித்தால், ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆண்தான்... ஒவ்வொரு குழந்தைக்கும். 23 + 23 ரோமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமொசோமே முடிவு செய்கிறது. தாயிடம் XX குரோமொசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ XY என இருவிதமான மாறுபட்ட குரோமொசோம்கள் உள்ளன. ஆணின் Y யுடன் பெண்ணின் X சேர்ந்தால் ஆண் குழந்தையும், இருவரின் X+X சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறியுள்ளது. ஆக, ஆண் குழந்தையை உருவாக்கும் Y குரோமொசோம்கள் ஆணிடம் மட்டும்தான் உள்ளது. பெண்ணிற்கு Y குரோமொசோம்கள் தந்தை வழிகூட வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து Y குரோமொசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழிவழியாக வளர்கிறது. வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் தொடர்ந்து... இது ஒவ்வொருவரிடமும் கப்பட்டு, தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள். பெண் குழந்தைகளை குல விளக்காகக் காத்தனர்.
பொதுவாக, 13 தலைமுறைக்குமேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெளிஸ் ஆணின் Y குரோமெர்சோம்கள் ரொம்ப பலவீனமான ஒன்று, மேலும், தொடர்ந்து கால காலமாக இந்த Y குரோமொசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகி கொண்டிருக்கிறதாம். எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால். ஏற்கெனவே பலவீனமான Y குரோமொசோம்கள் மேலும் பலவீனம் அடையக் கூடாது என்பதாலும். பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என் சொந்த இரத்த உறவுகளுக் இடையே திருமணம தவிர்க்கப்படுகிறது. பொதுவாக, பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களா இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம், புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்.
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டில் குல தெய்வத்தை வணங்குபவர்கள், திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குல தெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகிவிட்டால் பிறந்த வீட்டின் குல தெய்வத்தை வணங்குவது கிடையாது. அப்படி இல்லாமல், பிறந்த வீட்டில் குலதெய்வத்தையும் வழிபடுவது, அவர்களை? புகுந்த வீட்டில் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ வழி வகுக்கும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குல தெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குல தெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம்.
குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், சக்திபெற்ற ஆலயங்களுக்குச் சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். ஏனெனில், மூத்தோர் ஆசி இல்லாமல் இருக்கும்போது அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் எவ்வாறு அருள் வழங்கும்?!
என்வே, உங்கள் குல தெய்வத்தின் கோயிலுக்கு அடிக்கடி செல்லுங்கள். அல்லது. குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். அவ்வாறு செய்வதால் உங்கள் சந்ததி வளம்பெறும். உங்கள் வாழ்க்கை செழிப்படையும். உள்ளம் அமைதியுறும். அங்குசென்று அபிஷேக ஆராதனைகளை நீங்களே செய்யுங்கள். அக்கோயிலின் வளர்ச்சிக்கு உதவுங்கள். அது கோயில் அல்ல, உங்கள் முன்னோர்கள் வாழும் இல்லம், உங்கள் முன்னோர்கள். வந்துசென்ற பாதை, வழிபட்ட புண்ணிய இடம். அங்கு உங்களின் பாதம் பதிவதால், பாவங்கள் தீரும். புண்ணியம் கிடைக்கும். வாழ்வு பரிபூரணமாகும். மேலும் குலதெய்வங்கள் என்று சொல்வதில். இருக்கும் உண்மை, புரிகிறதா? குலதெய்வம் என்று வழிவழியாகச் சொல்லிவருவது வேறொன்றும் இல்லை. அவர்கள் உங்கள் பெற்றோரே. நாளை நீங்களே, உங்கள் பிள்ளைக்கு. ஒவ்வொருவரின் கண்கண்ட முதல் குலதெய்வம் பெற்ற தாயும், தந்தையும் தான் என்பதே பரம்பரை பரம்பரையாக குல தெய்வங்கள் என்பதன்மூலம் நமக்குச் சொல்லப்பட்டு வருகிறது.
என்றொரு வழக்குமொழி நமது முன்னோர்களால் சொல்லப்பட்டு வந்தது. நமது மூத்தோர்கள் நமது நன்மைக்காகவே பல காரியங்களை மறைமுகமாக செய்துவிட்டு சென்றனர். அவர்களின் வாக்கை மேம்போக்காக எடுத்துக் கொள்ளாமல், வாழ்க்கைப் பயணத்திற்கான நீ வழிகாட்டியாக எடுத்துக்கொள்வதன்மூலம் மனம், உடல் சிறப்புறும். நாகரிகம் வளரவளர நாம் நமது மொழி, கலாசாரம், பண்பாடு, உடை, உணவு என எல்லாவற்றிலும் மேலைநாட்டைச் சார்ந்து வாழப் பழகிக்கொண்டு வருகிறோம். பெற்றோரின் ஆசியும், மூத்தோரின் ஆசியும் இல்லாமல் போனால் நமது ஆத்மா கதியற்று நிற்கும் நிலை உருவாகும். எனவே, நமது ஆத்மா அமைதியுற, வாழ்க்கை செழிக்க, நமது முன்னோர்களின் ஆத்மாவை வழிபட்டு, அவர்களின் ஆசிபெறுவது அவசியமாகும். “தாயிற் சிறந்த கோயிலுமில்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ குலதெய்வம் இன்றி குல விருத்தி இல்லை. எனவே, நம் முதல் தெய்வமான பெற்றோரைப் போற்றுங்கள்.
® 2025 அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை பதிவு எண் : 155/2003.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.