27 நட்சத்திரக்காரர்களுமே விபூதியை அபிஷேகத்துக்கு அளிக்கலாம் என்பது சிறப்பு.
1. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சங்காபிஷேகம் செய்யலாம்.
2. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்னாபிஷேகம் செய்ய அன்னம் கொடுக்கலாம்.
3. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன் வாங்கி தரலாம்.
4. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுகந்த தைலம் வாங்கித் தரலாம்.
5. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனுகு, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம் போன்ற பரிமள திரவியங்கள் வாங்கித் தரலாம்.
6. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குங்குமப்பூ, மலர்கள் அளிக்கலாம்.
7. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அபிஷேக நீரில் சேர்க்க வில்வம், தர்ப்பை வாங்கித் தரலாம்.
8. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாராபிஷேகம் செய்ய பாத்திரம் வாங்கிக் கொடுக்கலாம்.
9. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லிப் பொடி வாங்கித் தரலாம்.
10. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விபூதி வாங்கித் தரலாம்.
11. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பன்னீர் கொடுக்கலாம்.
12. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கரும்புச்சாறு வாங்கி தரலாம்.
13. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழச்சாறு வாங்கி தரலாம். குறிப்பாக, எலுமிச்சை, நாரத்தம், கொழுச்சி, மாதுளம் பழச்சாறு வாங்கி தரலாம்.
14. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பசு நெய், பால், தயிர் போன்ற பஞ்சகவ்யம் வாங்கித் தரலாம்.
15. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன் வாங்கித் தரலாம்.
16. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாவுப்பொடி வாங்கித் தரலாம்.
17. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பஞ்சாமிர்தம் வாங்கித் தரலாம்.
18. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மா, பலா மற்றும் வாழை போன்றவற்றால் பலாமிர்தம் வாங்கித் தரலாம்.
19. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொர்ணாபிஷேகம் செய்ய நகைகள் கொடுத்து வாங்கலாம்.
20. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எண்ணெய், அபிஷேகப்பொடி வாங்கித் தரலாம்.
21. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுகந்த திரவியங்கள் வாங்கித் தரலாம்.
22. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாம்பொடி, நெல்லிப் பொடி வாங்கித் தரலாம்.
23. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திரவியப்பொடி வாங்கித் தரலாம்.
24. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்தனம் வாங்கித் தரலாம்.
25. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்நபனம் செய்யலாம்.
ஸ்நபனம் என்பது ஐந்து வகையான புண்ணிய தீர்த்தம்.
26. ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மஞ்சள் பொடி வாங்கித் கொடுக்கலாம்.
27. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளநீர் வாங்கி தரலாம்.