ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெத்தாம்பாளையம் கிராமம் காஞ்சி ஒடுவங்க நாட்டு குலாலர் குலதெய்வம் அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ பழமையும் பெருமையும் வாய்ந்த கொங்குநாடில் அழகுற அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு ராஜா நகர் என அழைக்கப்படுகிறது. பெருந்துறையில் இருந்து 6 KM தொலைவில் பெத்தாம்பாளையம் செல்லும் வழியில் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து (ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல்) அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள். காஞ்சி ஒடுவங்க நாட்டு குலாலர் இன மக்கள் கோயில் கட்டி தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். மேலும் ஊர்ப்பொதுக்களும் வழிபட்டு வருகிறார்கள்.
அமாவாசை வழிபாடு : ஒவ்வொரு அமாவாசை அன்று பகல் 12 மணி அளவில் இந்த திருக்கோயிலில் சிறப்பான முறையில் அபிஷேகம் செய்து பூஜை, ஆராதனைகள் நடந்து வருகிறது, மேலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெறுகிறது. உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது.
பௌர்ணமி வழிபாடு : ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை 6 மணி அளவில் இந்த திருக்கோயிலில் முத்தாய் அம்மனுக்கு சிறப்பான முறையில் அபிஷேகம் செய்து பூஜை, ஆராதனைகள் நடந்து வருகிறது, மேலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெறுகிறது.
திருநீலகண்ட நாயனார் குரு பூஜை வழிபாடு : தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்ட நாயனார் குரு பூஜை சிறப்பான முறையில் நடைபெறுகிறது.
திருவிளக்கு பூஜை வழிபாடு : திருவிளக்கு பூஜை வழிபாடு இந்த திருக்கோயிலில் சிறப்பான முறையில் பூஜை, ஆராதனைகள் நடந்து வருகிறது, மேலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெறுகிறது.
சங்கடஹர சதூர்த்தி & கிருத்திகை : பிரதி மாதம் சங்கடஹர சதூர்த்தி மற்றும் கிருத்திகை சிறப்பான முறையில் கட்டளைதாரார்களால் பூஜை நடந்து வருகிறது.
இதர பூஜைகள் : தைப்பூசம், கந்த சஷ்டி கவசம், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், மஹா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, ஆடி பெருக்கு, தீபாவளி, பங்குனி உத்திரம், மார்கழி மாத பூஜைகள் இந்த திருக்கோயிலில் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.
கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன. தமிழில் கோயில் என்னும் சொல் கோ + இல் எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே கோ என்பது இறைவனையும், இல் என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். எனவே கோயில் என்பது "இறைவன் வாழுமிடம்" என்னும் பொருள் தருகிறது. பொது வழக்கத்தில் கோயில் மற்றும் கோவில், என்ற இரு சொற்களும் உண்டு. தமிழ் இலக்கண விதிப்படி கோவில் என்றே வருகிறது.
தெய்வ வழிபாடு இருநிலைகளாக மேற்கொள்ளப்படுகின்றன. அவை
பெருநெறி வழிபாடு, சிறுநெறி வழிபாடு என்பனவாம். பெருநெறி என்பது சிவன்
திருமால் முதலான தெய்வங்களை வழிபாடு செய்வது ஆகும்.
ஐயனார் முனியாண்டி, காளியம்மன், மாரியம்மன் முதலான தெய்வங்களை
வழிபடுதல் சிறுநெறி வழிபாடாகும். கிராமங்களுக்கு சிறு தெய்வ வழிபாடுகள்
உயிர்நாடியாக விளங்குகின்றன.
® 2025 அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை பதிவு எண் : 155/2003.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.